சத்யபாமாவும் கிருஷ்ணனும்

 சத்யபாமாவும் கிருஷ்ணனும்

(புராணக் கதை அல்ல)

எனது மைத்துனி சத்யபாமா (பாமா) பெருமாள் திருவடி நிழலில் இணைந்து, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. நாராயணனைச் சேரும் 12ஆம் நாள் நிகழ்ச்சியும், சுபஸ்வீகாரமும், ஒரு வாரம் முன்பு நிறைவு பெற்றன. ஆனால், மனம் இன்னமும் ஒரு நிலைக்கு வரவில்லை. ஓய்வு பெற்ற பின் உணர்ச்சிவசப்படாமல், யதார்த்த நிலையில் வாழ விரும்பியும், எதிர்பார்ப்பு ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டியும், என்னைச் சுற்றி ஒரு சிறிய வட்டம் போட்டு, மற்றவர்களிடம் இருந்து ஒரு சிறிய மனஇடைவெளியுடன் பழகும் எனக்கே இப்படி என்றால், கோமளா, உஷா (சகோதரிகள்), குமார் (இளைய சகோதரன்) நிலையை யோசித்துப் பார்க்கிறேன். என் மனைவி உஷா, தன் 'ப்ரிய சகி' யையும் கோமளா, குமார் தங்கள் தாயின் பாதுகாக்கும் சிறகினையும் இழந்திருக்கிறார்கள். 

பாமாவும் உஷாவும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதை விட இணை பிரியா தோழிகள் என்று தான் கூற வேண்டும். உஷா உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பாமாவுடன் எப்படியாவது எல்லா நாட்களிலும் 15 நிமிடமாவது பேசியிருப்பாள். இருவரும் பேசாத subject ஒன்று உலகில் இருக்காது. அரசியல், சமையல், உறவினர், நண்பர்கள், வேலை, பொழுதுபோக்கு, ரசித்தவை, மற்றவர்களைப் பற்றிய கருத்துக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ரெண்டு பேருக்குமே ரசனை ஒத்த அளவிலானது. சண்டைகளும் உண்டு, உடனே சமரசமும் உண்டு. பாமாவின் பிரிவு அதிகமான தாக்கத்தை உஷாவிடம் நீண்ட நாள் ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. 

கோமளாவின் அரண் என்று பாமாவை சொன்னால் மிகையில்லை. கோமளா வயலின் கற்றுக்கொண்ட போது, பாமா கூடவே keyboard கற்றுக்கொண்டாள். அவர்கள் அம்மாவின் கடைசி காலத்தில், அவரைப் பார்த்துக் கொள்வதில் இருவரும் இணைந்து காட்டிய அக்கறை, திருப்பூரையே வியப்பில் ஆழ்த்தியது.‌ அம்மாவின் காலத்திற்குப் பின், இருவரும் சேர்ந்து பாராயணம் செய்த ஸ்லோகங்களும், ஸ்தோத்திரங்களும், கம்ப்யூட்டரில் ஒரு folder அளவு நீளும். காலை 10 முதல் 11 வரை அவர்கள் சேர்ந்து படிக்கும் போது, சுற்றி இருக்கும் வீடுகளில் உள்ளவர்களும் பயனடைவர். காலை உணவு சமயத்தில் - மதியம் என்ன சமைக்க வேண்டும், மதிய உணவு சமயத்தில் - இரவு உணவைப் பற்றி ஆலோசிக்க, கோமளாவுக்கு இனி யார் உதவப் போகிறார்கள்?

குமாருக்கு எல்லாமே பாமா தான். பாமா வேலை பார்த்த KVBயில் பாமாவின் நண்பர்கள் அனைவரும் குமாரின் நண்பர்கள். வெளியூர் செல்ல  திட்டமிடுதல், வரவு செலவு பற்றிய ஆலோசனை, கர்நாடக சங்கீதத்தில் ராகங்களைப் பற்றிய சர்ச்சை, சேர்ந்து ரசிக்கும் கர்நாடக மற்றும் திரையிசை பாடல்கள்,  cable tv மற்றும் you tube channelகள் என்று அனைத்து தினசரி பொழுதுபோக்குகளில் இருவரும் இணைந்தே பயணித்தார்கள். பாமாவுடன் தன் சிறுவயது போட்டோவை பார்த்து குமார் அழும் போது, என்ன சொல்லித் தேற்றுவீர்கள்?

உஷா சிறிது காலம் சென்றபின், இந்தத் துயரத்துடன் வாழ கற்றுக் கொண்டு விடலாம், ஆனால் பாமா இல்லாத துயரத்தில் இருந்து குமார், கோமளா மீளுவார்களா? பெருமாளிடம் பிரார்த்திப்போம். 

ஐந்து மீட்டர் இடைவெளிக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்படியான மெல்லிய குரல், உச்ச ஸ்தாயியில் செல்லாமல் மிருதுவான குரலில் இனிமையான பாட்டிசைத்தல் (கோவில்களின் அர்ச்சகர்கள் மெய் மறந்தது பலமுறை), தான் பணிபுரிந்த KVBயிலும், வாழ்ந்த திருப்பூரிலும், சில காலம் வசித்த கரூரிலும், கடைசியில் வசித்த SGV கோவையிலும், சுருக்கமான நட்பு வட்டம் என்றாலும், தகுதி, வயது வித்தியாசமில்லாமல் பழகும் தன்மை, ரசித்து சிரிக்கும் தருணங்களில் வாய் மற்றும் கண்ணாடியினூடே கண்களும் மகிழ்ச்சியை அனுபவிப்பது, இவை அனைத்தும் பாமா என்ற அந்த மேன்மை நிறைந்த பெண்மணியின் அடையாளம். சொல்லும் வார்த்தைகள் சிக்கனம், மெருகு மற்றும் உள்ளிருக்கும் உயர்ந்த சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக இருக்கும். பேச வருபவரும், பாடல் கற்க வருபவரும் பாமாவின் சிறப்பியல்புகளால் கவரப்பட்டு, அடுத்த சந்திப்பிற்கு ஏங்கும் நிலையுடனும் உற்சாகத்துடனும் செல்வர். 

பாமா பஞ்ச சம்ஸ்காரமும், பரன்யாசமும், ஆச்சார்யன் வழியாக செய்து கொண்டவர். அனைத்து கோயில்களுக்கும் வந்து வழிபட்டாலும், காணும் தெய்வங்கள் அனைத்துமே கிருஷ்ணனாகவும் தாயாராகவுமே தனக்குத் தெரிவதாக சொல்லுவார். இங்கு காணப்படும் கிருஷ்ணனின் சிலை வடிவம் 1983ல் உஷாவிற்கு அவர் தோழி மல்லிகாவினால் சென்னையில் தரப்பட்டது. அதிலிருந்து கிருஷ்ணன் அடைந்த பரிணாம வளர்ச்சி வியக்கத்தக்கதாகும். திருப்பூர் பெரிச்சிப்பாளையத்தில் பிரத்தியேக show case, விதவிதமான மாலைகள், நகைகள், வஸ்திரங்கள் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காட்சி தந்தார். கோவை SGV வீட்டில் கோவிந்தன் புல்லாங்குழலுடன் பாமாவினால் தினசரி அலங்கரிக்கப்பட்டு, அழகு மிளிர, தரிசனம் தந்து கொண்டிருந்தார்.‌ இவருடன் மகாலட்சுமி தாயாரும் hallல் கம்பீரமாக காட்சி தருவார். 

பாமா "ப்ரதிபட‌ ச்ரேணி பீஷண" என்று தொடங்கும் சக்கரத்தாழ்வார் பாடல், தன்னை எப்பொழுதும் காக்கிறது என்று சொல்வார்.  1998ல் fibroid surgeryக்கு பிறகு, குடல் stitch பிரிந்ததனால் குடல் வெளியே வந்த ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்தார். 2013ல் intestine adhesion என்ற அரிய உடல்நிலை தாக்கத்தில் இருந்தும் ஆச்சரியத்தக்க விதத்தில் சகஜ நிலைக்கு திரும்பினார். ஆனால் இப்பொழுது குணமாகி வீட்டிற்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, எதிர்பாராதது நடந்தது. ஒருவேளை, சுதர்சனர் பிறவிப் பெருங்கடல் என்ற துன்பம் மிக்க பயணத்திலிருந்து அவரை கிருஷ்ணன் திருவடி என்ற கரையில் சேர்த்துக் காப்பாற்றி விட்டாரோ? "கண்டவர் விண்டிலர்", "விண்டவர் கண்டிலர்" என்று சொல்லப்படும் இறைத் தன்மைக்கே வெளிச்சம். 

கனத்த உள்ளத்துடன் 

வெ. விஸ்வநாதன் 

15.12.2024.



Comments

  1. உயர்ந்த உள்ளம், சிறந்த நட்பு, கேளாமலேயே உதவிடும் நற்குணம், தன் அனுபவங்களால், பிறருக்கு வழிகாட்டும் நன்நெறி.

    நோயுற்ற போதும் கம்பீரம். தன்னம்பிக்கை. நோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி வீழ்ந்தார். அடைந்த துன்பங்களிலிருந்து விடுதலை தரவே தான் பெருமாள், தன் திருவடி சேர்த்துக் கொண்டார் போலும்.

    குடும்ப நண்பர் என்ற முறையில், உங்களையும், திருமதி உஷா, கோமளா, குமார் பற்றி நன்கறிவேன். வேதனையின் உச்சத்தில் இருக்கும் உங்கள் அனைவருடனும், இந்த சொல்லொணா துயரத்தில் பங்கேற்கிறேன். அவரின் மரணத்தினால் மிகச் சிறந்த நண்பரை மட்டுமல்ல, என் குருவையும் நான் இழந்து நிற்கிறேன்.

    காலம் தான் இயக்குநர். அதன் கருவிகளாகவே நாம் செயல்படுகிறோம். காலமே நம் மன நிலையை சாந்தப்படுத்தும்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆத்மா சாந்தி மற்றும் நற்கதி அடைய எங்கள் பிரார்த்தனைகள்.


    K S துரைராஜன் மற்றும் குடும்பத்தினர்.

    ReplyDelete
  2. நல்லா சகேதரியை இழந்து விட்டோம். பாமா ஏப்பொழதும் நம்முடன் நம் நினைவைவிட்டூநீங்காமல் நம்மை வழிநடத்துவார் என்பதில் எனக்கு உறுதியான நம்பிகை உண்டு. பாம எப்பெழதும் நம்முடண் வாழ்தந்துகொண்டே இருப்பார். 🙏🙏

    ReplyDelete
  3. A very fine human being, a good friend, a great devotee of Krishna, a guiding light and above all patience personified. I am 100 % sure that there is no rebirth for Bhama. Viswanathan, who has the ability to write beautifully in English and Tamizh, has once again brought out a wonderful piece.

    ReplyDelete
  4. உஷா பாமா கோமளா குமார் (மற்றும் அவர்களது தாயார், மாமா, மூத்த சகோதரர் ராஜு) இவர்களுடன் எனது தொடர்பு நான் திருப்பூர் கிளையில் 1985 இல் சேர்ந்த பொழுது துவங்கியது. பாமாவுடுன் பல வருடங்கள் வங்கி மற்றும் foreign exchange சம்பந்தமான விஷயங்கள் பேசி இருக்கிறேன். மிகவும் அறிவு கூர்ந்த விஷயங்களாக இருக்கும். ஒரு முறை பாமாவின் வங்கி கிளையில் சென்று அவர் முன் நின்ற பொழுது அவரது அதிசியம் கலந்த சந்தோஷம் இப்பொழுதும் என் கண் முன்னால் நிற்கின்றது. தன்னடக்கம், அன்பு, அறிவு என்று எல்லாவற்றிற்கும் உதாரணமாக இருந்தார் பாமா. நான் திருமணம் ஆன பிறகு உஷா வீட்டிற்கு மனைவி ஜெயஶ்ரீ உடன் சென்ற பொழுது எங்களை குடும்ப அங்கத்தினர் போல் ஆக்கிவிட்டனர். பாமா தனது பக்தி பரவசத்தில் கிருஷ்ணன் காலடியில் சென்றடைந்து விட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. உஷா, கோமளா, குமார் இந்த துயரத்திலிருந்து மீள பெருமாள் அருள் புரிய வேண்டும் 🙏

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் Subbaraman அவர்களே

    ReplyDelete
  6. மிகவும் அருமையான பதிவு மற்றும் பகிர்வு. வணங்குகிறேன் 🙏

    ReplyDelete
  7. அருமை சகோதரி பாமா அவர்கள் மறைவு எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறது. உஷா அவர்களது குடும்பத்தினருடன் எனது நட்பு 1986 ல் தொடங்கியது. ஒரு நாள் ஏதோ காரணத்திற்காக நான் மிகுந்த கோபம் கொண்டு இருந்த போது, உஷா அவர்கள் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் பாமா அவர்களை அறிந்தேன். மூன்று சகோதரிகளில் மிக குறைவாக பேசுபவர் அவர்தான். அவரது கண்களாலேயே அன்பையும் கருணையையும் வெளிப்படுத்த தெரிந்தவர் என்பதால் வார்த்தைகளின் அவசியம் அவருக்கு அதிகம் இல்லை. பல வருடங்களுக்கு பிறகு நான் திருப்பூர் சென்ற போது அவரை அவரது வங்கிக்கிளையில் சந்தித்து நெடுநேரம் அவருடன் உரையாடிக் கொண்டுருந்தது என்றென்றும எனது மனதில் நிலைத்து இருக்கிறது. அவரது ஆன்மீகப் பயணமூம், மிகுந்த வலிமையுடன் உடல்பிணியை கடந்து சென்றதும் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. அவர் அவரது இஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணர் திருவடிகளில் என்றென்றும் இருந்து எல்லோரையும் வழி நடத்துவார். எனினும் நான் அன்பான ஒரு சகோதரியை இழந்து இருக்கிறேன் என்பதிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் காலம் ஆகும்.

    ReplyDelete
  8. The above from V Manimaran

    ReplyDelete
  9. 1996 லிருந்து 1998 வரை அவருடன் கேவீபீ தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறேன். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், நல்ல சமயோசித்துடன் நகைசுவை ததும்பபேசுவதில் வல்லவர். அவரை அருமையான நண்பர். இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்
    இவன்
    வி லக்ஷ்மி நாராயணன், ஹைதராபாத்

    ReplyDelete
  10. A kind hearted and knowledgeable person. Helped lot of people in growing up the ladder in banking career. We also join with the family members and friends in mourning her sudden demise

    ReplyDelete
  11. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆத்மா சாந்தி மற்றும் நற்கதி அடைய எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  12. Yesterday marked one month since Bhama left us. Quite often we have talked about coping with loss, Bhama would say that with time we will learn to live with the vacuum. Was she wrong on this? Every passing day, brings back so many precious memories which have only deepened the pain.

    Bhama : I used to call her BHAM since she was a BALM for all of us.

    It was nothing but God's Grace that brought me to SGV where I was her neighbour. My family used to say that we were sisters rather than friends. I have not known another person whom I can describe as a PERFECT individual.

    There was never a topic which we could not discuss with complete ease & openness. Our long conversations would start at some topic and meander through all kinds issues : Books, politics, family problems, current affairs, religion, cooking, childhood memories, banking. All this would end only when Usha or Komala reminded us that it was time for dinner.

    There was something very special about Bham. She was so good at creating a safe space where no topic was taboo. Her twinkling, childlike eyes showed she enjoyed and appreciated everything she came across. Thinking back, I cannot recall any instance when she was bitter and hateful towards any issue or individual. She always saw the best in everything and everyone!

    Books ! Bham was a voracious reader. Her library had fast paced thrillers we would have read as youngsters (I think she had a soft corner for Neville Shute). Alongside were serious autobiographies, books on philosophy, short stories.... She introduced me to Tamil Literature. Her outlook to life, tolerance, erudition, deep love for humans and nature were surely shaped by the counless books she read.

    Through Bham's many anecdotes, I have been introduced to her family: her late mother (a most talented writer & guardian of the family), Father (who was one of the pioneers in introducing automation to Tiruppur garment factories), brother Raju & his trips to Calcutta, sister Komala (whom she referred to as a naughty girl & the best cook ), sister Usha ( whose focus & determination she admired so much) and brother Kumar ( she would lovingly call him a Doctor since he knew so much about medicines). Her brother-in-law Shri.Viswanathan, she held in the highest esteem. Her numerous cousins, uncles, aunts were all relatives who were part of her rich narratives. Her wide circle of friends would amaze me. Almost everybody she crossed in life was attracted to her goodness and got a special place in her heart. I got to know them all though I have never met many of them.

    Bham was a deeply devout person. She was truly one with Shri Krishna whom she adored. I think she is with Him and at Eternal Peace.

    Rather than mourn Bham's loss, I would like to celebrate her life and the wonderful friendship I was blessed to enjoy with her.

    Lakshmi Krishnamurthy

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IBC resolutions and haircuts

An open letter

என்னை பண்படுத்திய தருணங்கள்